லெபனானில் கடத்தல்காரர்கள் என நினைத்து அகதிகள் படகின் மீது கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து குழந்தை உள்பட 6 பேர் பலி.!.

0 3050

லெபனானில் கடத்தல்காரர்கள் என நினைத்து அகதிகள் படகின் மீது கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சிரியா, லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60 பேரை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஐரோப்பிய நாடுகளைச் நோக்கி சென்றுள்ளது.

அவர்களைக் கடத்தல்காரர்கள் என கருதிய லெபனான் கடற்படையினர் சுற்றிவளைக்க திட்டமிட்டு அகதிகள் படகின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அகதிகள் சென்ற படகு நிலைகுலைந்து கடலில் மூழ்கியது. 47 பேர் மீட்கப்பட்ட நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணி நீடித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments