அமித்ஷா வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக புகார்

0 3708
போராட்டத்தில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக புகார்

புதுச்சேரியில், மத்தியமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்டவர்களுக்கு, காவல்நிலையத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவிருந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களுள் சிலர் கோரிமேடு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவில் பல்லி இருந்ததாக புகார் தெரிவித்த சிலர், தரமற்ற உணவு வழங்கியதாகக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அந்த உணவை சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments