ராசிபுரத்தில் வானில் சூரியனை சுற்றி திடீரென தோன்றிய ஒளிவட்டம்...ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்.!

0 3146

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வானில் சூரியனை சுற்றி திடீரென கருமை நிறம் சூழ்ந்து வானவில் போன்று ஒளிவட்டம் தோன்றியது.

சுமார் அரைமணி நேரம் வரை நீடித்த இந்த ஒளிவட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். பலரும் அந்த அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரப்பி வருகின்றனர்..

பொதுவாக வளிமண்டலத்திலுள்ள பனி படிமங்கள் வழியாக, சூரியனின் ஒளி ஊடுருவிச் செல்லும் போது இது போன்ற ஒளிவட்டங்கள் தோன்றுவது வழக்கம்.

அது அறிவியல் ரீதியில் 22 டிகிரி வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments