திரிபோலி நகரத்தை ஒட்டிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து.. குழந்தை உயிரிழப்பு - 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்

0 2535
திரிபோலி நகரத்தை ஒட்டிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து.. குழந்தை உயிரிழப்பு - 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்

லெபனானில் திரிபோலி நகரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது. 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து லெபனானியர்கள் மற்றும் சிரிய அகதிகள் 60 பேர் திரிபோலிக்கு தெற்கே உள்ள காலமன் பகுதியில் இருந்து படகில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளனர்.

அந்தப்படகே விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்டவர்கள் அனைவரும் நகரத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments