கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

0 3538
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் நாளை அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அக்கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments