சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீரென பற்றிய தீ

0 3715

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி என்பவர், உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு தனது வி.டெக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், தேவாங்கர் வீதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர் வாகனத்தை மருத்துவமனை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்ற நிலையில்,அது திடீரென தீப்பற்றி எரிந்தது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அருகிலிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்திலும் தீப்பற்றிய நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலுமாக எரிந்து நாசமானதோடு, தீப்பற்றிய மற்றொரு பைக்கின் சீட் எரிந்து சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments