ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தாமல் இருந்த காதல் மனைவி...கடுப்பில் கணவன் வெறிச்செயல்..!

0 4296

சென்னை கண்ணகி நகரில் ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தாத ஆத்திரத்தில் காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டான்.

ஆட்டோ ஓட்டுநர் புகழ்கொடி என்ற டில்லி, சரிதா என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் சரிதா, வேறு ஒருவருடன் செல்போனில் பேசுவதை அறிந்த புகழ்கொடி, அவரை பலமுறை எச்சரித்ததோடு, ஆண் நண்பரிடம் பேசியதை செல்போனில் தானாக ரெக்கார்ட் ஆகும்படி செய்து, அதை ஆதாரமாக வைத்து மனைவியிடம் சண்டை போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன் கணவன் உறங்கியதாக நினைத்து சரிதா ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை அறிந்த புகழ்கொடி, அவரை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு உறங்கியதாக கூறப்படும் நிலையில், காலை எழுந்து பார்த்தபோது சரிதா சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

அதன்பின் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments