"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே"...பாடலை மேற்கோள்காட்டி செய்தியாளருக்கு பதிலளித்த அமைச்சர்.!

0 3318

பள்ளிகளில் மூர்க்கமாகச் செயல்படும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பின் அவரிடம் பள்ளிகளில் சில மாணவர்கள் மூர்க்கமாக நடந்துகொள்வது குறித்துச் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்குப் பதிலளித்த அவர், "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்கிற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments