சீர்மிகு நகர திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு இந்திய அளவில் 3-வது இடம், தமிழக அளவில் முதலிடம்

0 3582
சீர்மிகு நகர திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு இந்திய அளவில் 3-வது இடம்

சீர் மிகு நகர திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களில் திருநெல்வேலி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளது.

இந்திய அளவில் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டப்பட்டப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட நகரங்களை தேர்வு செய்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டுவசதி துறை சார்பில் விருது வழங்கும் விழா சூரத்தில் கடந்த 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் 3-வது இடம்பெற்ற திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளர் மற்றும் சீர்மிகு நகர நிர்வாக இயக்குநர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு விருதை பெற்றுக்கொண்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருநெல்வெலி மாநகரில் 965 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments