பாடப்புத்தகங்களை கையாடல் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் புத்தகங்கள் கையாடல்

0 2266
பாடப்புத்தகங்களை கையாடல் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் புத்தகங்கள் கையாடல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலக மைய வளாகத்தில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 ஆயிரம் பாடப்புத்தகங்களை கையாடல் செய்ததாக, 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விசாரணையில், வட்டார கல்வி அலுவலகத்தில் கிளர்க் ஆக பணியாற்றிய தங்கவேலும் உதவியாளராக பணியாற்றிய திருநாவுக்கரசுவும் இணைந்து புத்தகங்களை கையாடல் செய்தது தெரியவந்தது. 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை யாரிடம் விற்பனை செய்தார்கள் என அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments