டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தடை தொடரும் - உச்சநீதிமன்றம்

0 3061
டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தடை தொடரும் - உச்சநீதிமன்றம்

டெல்லி ஜகாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றத் தடை மேலும் இருவாரங்களுக்குத் தொடரும் என அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மனுவுக்குப் பதிலளிக்க வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஜகாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்த முறையீட்டை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்ததுடன் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது.

அது தொடர்பான மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது ஒரு சமூகத்தினரை மட்டும் குறிவைத்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கபில் சிபல், துஷ்யந்த தவே ஆகியோர்  கூறியதை சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா மறுத்தார்.

இந்த வழக்கில் இப்போதைய நிலை மேலும் இரு வாரங்களுக்குத் தொடரும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்குப் பதிலளிக்க வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments