பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை பரிசீலித்து அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு தனது அறிக்கை தாக்கல்.!

0 2814

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் குறித்த தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை பரிசீலித்து அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

சோனியா காந்தி நியமித்த சிறப்புக் குழு, கட்சியை பலப்படுத்தவும் அடுத்து வரவிருக்கும் தேர்தல்களுக்குத் தயார்ப்படுத்தவும் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து வருகிறது. இக்குழு இரண்டு அல்லது மூன்று நாட்களில் பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்த அறிக்கையை கட்சித் தலைமையிடம் தாக்கல் செய்ய உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் நேற்று நடத்திய ஆலோசனையின் போது ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சட்டிஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments