காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற தனி நீதிபதி கருத்து நீக்கம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2529
காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நிலம் விற்பனை தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  முடித்து வைத்த தனி நீதிபதி வேல்முருகன், காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள், திறமையற்றவர்களாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உயிரை பணயம் வைத்து பணியாற்றக்கூடிய காவல் துறையினர் மத்தியில் இந்த கருத்துக்கள் மன உளைச்சலை  ஏற்படுத்தியுள்ளது என்று டிஜிபி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments