கோளரங்கம் அமைப்பது பற்றி கேளுங்கள், கோளாறான கேள்விகளெல்லாம் கேட்காதீர்கள் - சபாநாயகர்

0 2398

தமிழகத்தில் வரும் காலங்களில் நிதிநிலைக்கேற்ப புதிய கோளரங்கம் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் புதிதாக கோளரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கந்தர்வக்கோட்டை மற்றும் பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, திருச்சியில் கோளரங்கம் இருப்பதால், கந்தர்வக்கோட்டையில் புதிதாக கோளரங்கம் அமைக்கும் எண்ணம் அரசின் பரிசீலனையில் இல்லை எனறார்.

ஒரு கோளரங்கம் அமைக்க 5 ஏக்கர் நிலமும், 15 கோடி செலவு ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே, அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் குறுக்கிட்டு அரசுக் கல்லூரியில் வகுப்பறை பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு சபாநாயகர் அப்பாவு, துணை கேள்வி கேட்டால் தெளிவாக கேளுங்கள் எனக் குறிப்பிட்டதோடு, கோளரங்கம் அமைப்பது பற்றி கேளுங்கள், கோளாறான கேள்விகளெல்லாம் கேட்காதீர்கள் என அறிவுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments