பிளஸ் டூ விடைத்தாள்களில் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்!

0 1983
பிளஸ் டூ விடைத்தாள்களில் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக விடைத்தாள்களில் மாணவர்களின் விவரங்களை சேர்க்கும்பணி நடைபெற்று வருகிறது.

மே மாதம் 5ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், 6ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும், 10ம் தேதி முதல் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்க உள்ளது.

இதற்காக மாணவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய தாள் விடைத்தாளின் முன்பக்கத்தில் வைத்து தைக்கும் பணி அந்தந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகள் முழுவதும் முடிந்த பின்னர் விடைத்தாள்கள் அனைத்தும் தலைமை ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புடன் வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments