உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு.!

0 2081

உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

லிவிவ் நகர சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன. நகரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

லிவிவ் நகரின் 4 இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், போலந்து எல்லைப் பகுதி மற்றும் சேமிப்பு கிட்டங்கிகளில் ரஷ்யப் படைகள் குண்டுவீசி அழித்ததாகவும் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments