மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் - அமைச்சர் பொன்முடி

0 2589

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப் பிரிவுகள் கொண்டு வரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தற்போதைய சூழலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேருவதில்லை என குறிப்பிட்டார்.

மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக விளக்கமளித்த அமைச்சர், இந்த ஆண்டு 10 கல்லூரிகளில் பி.எச்.டி படிப்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments