தவறு செய்திருந்தாலும், பதவிக்காலம் முடியும் வரை அதிபர் பதவியில் நீடிப்பேன் - கோத்தபய ராஜபக்சே திட்டவட்டம்

0 2891

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், எந்த சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டேன் என அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரசயான உரங்களை பயன்படுத்த தடை விதித்தது மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே நிதி உதவி கோராதது தமது தவறுதான் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமது ஆட்சியில் என்ன குறைபாடு இருந்தாலும் தற்போதைய பொருளாதார சவால்கள், சிரமங்களை சமாளிப்பது தமது பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.  அத்தியாவசிய பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் கோபம் தமக்கு புரிகிறது எனவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments