நடிகர் சூரியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை.. பணமோசடி புகார் தொடர்பாக 110 கேள்விகளுக்கு சூரி பதில்

0 3916
நடிகர் சூரியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை.. பணமோசடி புகார் தொடர்பாக 110 கேள்விகளுக்கு சூரி பதில்

பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் சூரி மூன்றாவது முறையாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி 110 கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 70லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி, சூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாத காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஆஜரான சூரியிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments