புதுச்சேரியில் அனுமதியின்றி கண்டெயினரில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது... ஆயிரம் லிட்டர் பெட்ரோல் கேன்கள், கண்டெயினர் பறிமுதல்
புதுச்சேரி யூனியன் காரைக்கால் அருகே உரிய அனுமதியின்றி கண்டெயினரில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
கீழக்காசாகுடிமேடு மீனவ கிராமத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பெட்ரோல் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் நேற்று இரவு கோட்டுச்சேரி காவல் நிலைய போலீசார் மற்றும் ,சிறப்பு அதிரடி பிரிவு போலீசார் இணைந்து கடற்கரை ஓரமாக அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது கீழக்காசாகுடிமேடு கடற்கரை ஒட்டி கண்டெயினர் ஒன்று இருந்ததை கண்டு அங்கு சென்று பார்த்தனர். அதில் 2 பெரிய கேன்களில் பெட்ரோலை நிரப்பி வைத்து அதிலிருந்து 5,10,25லிட்டர் கேன்களில் பெட்ரோலை நிரப்பி விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக முத்தீஷ் என்பவனை கைது செய்த போலீசார் அங்கிருந்த ஆயிரம் லிட்டர் பெட்ரோல் கேன்கள், கண்டெயினரை பறிமுதல் செய்தனர்.
Comments