பிளாட்பாரத்தில் நின்றிருந்த பெண் திடீரென மயக்கமடைந்து ரயில் மீது விழுந்தார்

0 2700
பிளாட்பாரத்தில் நின்றிருந்த பெண் திடீரென மயக்கமடைந்து ரயில் மீது விழுந்தார்

அர்ஜென்டினாவில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்து ஓடும் ரயிலில் விழுந்து உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

Buenos Aires அருகே உள்ள ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 29ந்தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த அந்த ரயில் நிற்க முயற்சித்த போது பிளாட்பாரத்தில் நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயக்கமுற்று நிலைதடுமாறி ரயிலில் விழுந்துள்ளார்.

பிளாட்பாரத்துக்கும் ரயில்பெட்டிக்கும் நடுவே அந்த பெண் விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments