குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ.!

0 3052

பாரத ஸ்டேட் வங்கி குறுகியகாலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைப் பூஜ்யம் புள்ளி ஒரு விழுக்காடு உயர்த்தியுள்ளது.

ஒருநாள், ஒரு மாதம், மூன்று மாதக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6 புள்ளி ஆறு ஐந்து விழுக்காட்டில் இருந்து ஆறேமுக்கால் விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

ஆறு மாதக் கடனுக்கான வட்டியை 6 புள்ளி ஒன்பது ஐந்து விழுக்காட்டில் இருந்து 7 புள்ளி பூஜ்யம் ஐந்து விழுக்காடாகவும், ஓராண்டுக் கடனுக்கான வட்டியை 7 விழுக்காட்டில் இருந்து 7 புள்ளி ஒரு விழுக்காடாகவும் உயர்த்தியுள்ளது.இந்த வட்டி விகித உயர்வு ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments