இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாகும் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே

0 3116
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாகும் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட உள்ளார்.

ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இந்த மாதம் 30ஆம் தேதி ஓய்வுபெறுகிறார். அவரையடுத்து ராணுவத்தில் மூத்த அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே அந்தப் பதவியில் நியமிக்கப்பட உள்ளார்.

ராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் முதல் பொறியாளர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின் முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி காலியாக உள்ளது.

ராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் மனோஜ் முகுந்த் நரவானே முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments