போலீசாரை ஆபாச வார்த்தைகளால் சகட்டுமேனிக்கு வசைபாடி மிரட்டிய போதை ஆசாமி கைது

0 3226
போலீசாரை ஆபாச வார்த்தைகளால் சகட்டுமேனிக்கு வசைபாடி மிரட்டிய போதை ஆசாமி கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விசாரணைக்கு சென்ற போலீசாரை போதை தலைக்கேறி போதை ஆசாமி ஒருவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, தாக்க முயன்ற வீடியோ வெளியான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிமடம் விலக்கு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் தகராறு நடப்பதாக வந்த தகவலின் பேரில், திருச்சுழி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரியும் முருககணேஷும், தலைமை காவலரும் அங்கு சென்றிருக்கின்றனர்.

அப்போது, உச்சக்கட்ட மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் போலீசாரை ஆபாச வார்த்தைகளால் சகட்டுமேனிக்கு வசைபாடி மிரட்டினார். நிலைமையை உணர்ந்த போலீசார் பொறுமையாக வீட்டுக்கு செல்லும்படி அந்த குடிமகனுக்கு எடுத்துக் கூறியும், அதனை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் பேசிய அந்த நபர் ஒருகட்டத்தில் போலீசாரை அடிக்க பாய்ந்தார்.

பின்னர், பதிலுக்கு போலீசார் ஒரு அறை விட்டதும் தூரமாகவே நின்று கொண்ட பிறகும் ஆபாச பேச்சுகளை விடவில்லை. இந்த நிலையில் போதை ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments