சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? - நடிகர் எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

0 4913
சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? - நடிகர் எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

சமூக வலைதளங்கில் அவதூறாக கருத்துப் பதிவிட்டதாக, தன் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன.

தொடர்ந்து அவதூறு கருத்துகள் மறுபதிவிடுவதை எஸ்.வி.சேகர் வாடிக்கையாக கொண்டதாக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை பார்த்த உயர்நீதிமன்றம், கடும் அதிருப்தி தெரிவித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments