தருமபுரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக எம்.பி. செந்தில்குமார்.!

0 2924

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அம்மன் கிரானைட் நிறுவனம் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திமுக எம்.பி., செந்தில்குமார் வழங்கினார்.

நிறுவனத்தின் தலைவர் முத்து ராமசாமி ஆண்டு தோறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், பொன்னேரி, எல்லப்புடையாம்பட்டி, கெலாப்பாறை, தாதம்பட்டி, சின்னாங்குப்பம் அரசுப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகராதி, ஜியோமெட்ரி பாக்ஸ், எழுதுகோல், நோட்டு, புத்தகம் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments