தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2994
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் என பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், சூலாங்குறிச்சியில் தலா 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments