தென்காசியில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 2 ஐடிஐ மாணவர்கள் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயம்.!

0 2391

தென்காசியில் கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற இரண்டு ஐடிஐ மாணவர்கள், பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தனர்.

4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் புளியரையில் இருந்து தென்காசி நோக்கி செல்லும் எண் 31 பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பொதுமக்கள் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது அதிக கூட்டம் காரணமாக ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்ட மாணவர்களில் இருவர் பிவிடி மில் என்ற பேருந்து நிறுத்தம் அருகே தவறி விழுந்தனர்.

காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற விபத்துக்களை தடுக்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments