குதிரை வண்டியில் மணமக்கள் ஜாலியாக ஒரு ரைடு... ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்

0 3393

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் சாலையில் மணமக்கள் குதிரை வண்டியில் சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பார்கவி தம்பதிக்கு திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் மணமக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ குதிரை வண்டியில் வீடு திரும்பினர். மணமகன் பிரசாந்த் குதிரை வளர்ப்பு, குதிரை ரேஸ் போட்டிகளில் ஆர்வமுடையவர் என்பதால் குதிரைவண்டியில் சென்றதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments