சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

0 1915

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல் கிடத்ததன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் சென்னையை சேர்ந்த வினோத்குமார், பேஸ்ட் வடிவில் 2 கிலோ தங்கத்தை எடுத்து வந்து நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் கொடுத்த போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments