டெல்லியில் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்

0 2325

இயற்கை எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் வாடகை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் இன்றும் நாளையும் இருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கடந்த ஒருமாதத்தில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்துப் புதுடெல்லி ரயில்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் எரிவாயு விலையைக் குறைக்கவோ, அல்லது கட்டணத்தை உயர்த்தவோ வேண்டும் என வலியுறுத்தினர். வேலை நிறுத்தத்தால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்கு ஆட்டோக்கள் இல்லாமல் பயணிகள் தவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments