அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை தொடர்பாக 21 பேர் கைது.. போலீசாரை சுட்ட 2 பேரில் ஒருவர் சிக்கினார்

0 3093
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை தொடர்பாக 21 பேர் கைது.. போலீசாரை சுட்ட 2 பேரில் ஒருவர் சிக்கினார்

டெல்லி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நிகழ்ந்த மோதல் வன்முறைகள் தொடர்பாக இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளனர்.

கல்வீச்சு வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற வன்முறைகளில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 21 பேரை அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டனர். இந்த கலவரத்தின் போது 8 போலீசார் காயம் அடைந்தனர்.

வன்முறையாளர்களில் ஒருவர் போலீஸ்காரர்களை  நோக்கி துப்பாக்கியால் சுட்டார். போலீசாரை துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரில்  ஒருவரை கைது செய்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். கூட்டத்தில் வாள் ஏந்திய 4 பேரையும் பிடித்து வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments