பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

0 2515

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததால் பீதி ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாத இரவுநேரம் என்பதால் சேதம் தவிர்க்கப் பட்டுள்ளது.

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று இரவு திடீரென அதிக சத்தத்துடன் குண்டு வெடித்ததாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கீழ்தளத்தில் படி ஏறும் இடத்தில் உள்ள சுவரில் குண்டு வெடித்து சிதறியதற்கான தடயங்கள் காணப்பட்டன .

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்யும் ஒரு நபர் நாட்டு வெடி குண்டு வீசியதாகவும், அந்த குண்டு வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments