இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சாலை வழியாக ஆப்கானுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல மேலும் 2 மாதம் அனுமதி

0 3776

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சாலை  வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமையை நிவாரணப் பொருளாகக் கொண்டு செல்ல அளிக்கப்பட்ட அனுமதியை பாகிஸ்தான் அரசு மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஆப்கானுக்கு இந்தியா வழங்க ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் வழியாக அந்த நிவாரணப் பொருட்களை சரக்கு லாரிகளில் கொண்டு செல்ல அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் ஆப்கானுக்கு இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா வழியாக சரக்கு லாரிகள் லாகூர் செல்ல பாகிஸ்தான் அரசு மேலும் 2 மாதங்களுக்கு அனுமதியை நீட்டித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments