கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல்.. 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், 13 பேர் காயம் என தகவல்

0 2080
கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல்.. 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், 13 பேர் காயம் என தகவல்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டு வீசித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீசி தாக்கி வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனிலிருந்து சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments