ஷாங்காயில் துர்நாற்றம் வீசும் கொரோனா தனிமை முகாம்கள்.. முகாமில் தங்கியிருந்த 20 வயது மாணவி வேதனை..!

0 2865

சீனாவின் ஷாங்காய் நகரின் கொரோனா முகாம்களில், அடிப்படை வசதி இல்லாமல் துர்நாற்றம் வீசுவதாக, அங்கு தங்கி இருந்த மாணவி கூறியுள்ளார். 

ஷாங்காய் நகரில் உள்ள தனிமை முகாம் ஒன்றில் கடந்த மாதம் தங்கியிருந்த, லியோனா செங் என்ற 20 வயது மாணவி,கொரோனா நோயாளிகளால் அரங்கமே நிரம்பி வழிந்ததாகவும் அத்தனை பேருக்கு தேவையான அளவுக்கு,  தண்ணீர் வரும் வகையில் நிரந்தர குழாய் இணைப்புகள் எதுவுமே இல்லை எனவும் கூறி இருக்கிறார்.

சிறிய அளவிலான போர்ட்டபிள் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலைமை இருந்ததால், மனித கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசியதாகவும், இதனால், கழிவறைக்கு போகாமல் தவிர்ப்பதற்காக சில நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்ததாகவும் மாணவி செங் வேதனை தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்தால் கூட, துர் நாற்றத்தால் தூங்கக் கூட முடியவில்லை எனவும் அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments