சென்னையில் கஞ்சா விற்பனைக்குத் துணைபோன புகாரில் 2 காவலர்கள் கைது
சென்னையில் கஞ்சா விற்பனைக்குத் துணை போனதாக புகாரில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான திலீப்குமார் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அயனாவரம் பனந்தோப்பு காலனி ரயில்வே குடியிருப்புகளுக்கு அருகே காலி இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
மேலும், ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி ஒருவரின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக்திவேல் என்ற காவலரும், டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரியின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் செல்வகுமார் என்ற காவலரும் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்ததை அடுத்து, அயனாவரம் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Comments