உக்ரைனில் ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவிப்பு

0 3865

உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கீவ் அருகேயுள்ள ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவில் துல்லியமாக ஏவுகணைகள் மூலம் புரோவரி பகுதியில் இருந்த வெடிமருந்து தொழிற்சாலையை தாக்கி அழித்ததாக குறிப்பிட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலால், சில உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக புரோவரி (Brovary) மேயர் இகோர் சபோஷ்கோ தெரிவித்துள்ளார். சமீப காலமாக, கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள இராணுவ தளவாடங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments