இந்தியாவில் 2011 - 2019 காலக்கட்டத்தில் வறுமையின் அளவு 12.3 விழுக்காடு குறைந்துள்ளது - உலக வங்கி

0 3376
இந்தியாவில் 2011 - 2019 காலக்கட்டத்தில் வறுமையின் அளவு 12 புள்ளி 3 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2011 - 2019 காலக்கட்டத்தில் வறுமையின் அளவு 12 புள்ளி 3 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மறு கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி எனப்படும் உலக வங்கி வெளியிட்டுள்ள கொள்கை விளக்க அறிக்கையில் இந்தியாவில் 2011ஆம் ஆண்டு வறுமையின் அளவு 22 புள்ளி 5 விழுக்காடாக இருந்ததாகவும், அது 2019ஆம் ஆண்டில் 10 புள்ளி 2 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புறத்தைவிட ஊர்ப்புறத்தில் வறுமை அளவு அதிகம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சிறுகுறு விவசாயிகளின் வருமானம் 10 விழுக்காடு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் பன்னாட்டுப் பணநிதியம் வெளியிட்ட அறிக்கையிலும் இந்தியாவில் கிட்டத்தட்ட வறுமை ஒழிக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments