மகாராஷ்டிராவில் மகன் கண்முன்னே மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்.!

0 2665

மகாராஷ்டிர மாநிலத்தில் உணவில் உப்பு கூடுதலாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மகன் கண்முன்னே மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தானே மாவட்டத்தைச் சேர்ந்த நிகேஷ் காக் - நிர்மலா தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை நிர்மலா கிச்சடி சமைத்து காலை உணவாக நிகேஷுக்கு பரிமாறியுள்ளார்.

கிச்சடியை சாப்பிட்ட நிகேஷ், உணவில் உப்பு கூடுதலாக இருந்ததாகக் கூறி நிர்மலாவை தாக்கியுள்ளார்.

அங்கிருந்த அவர்களது மகன், தாயை அடிக்க வேண்டாமென கெஞ்சியும் நிகேஷ் நிர்மலாவை சரமாரியாக தாக்கியதோடு, கயிற்றை எடுத்து அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

உறவினர்களால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிர்மலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிகேஷை தேடி வந்த நிலையில், அவன் போலீசில் சரணடைந்துள்ளான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments