தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூரில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு உள்பட 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
18 ஆம் தேதி அன்றும், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments