இலங்கையில் பங்கு சந்தை ஒரு வாரத்திற்கு மூடப்படுமென அறிவிப்பு.!

0 2902

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக திருப்பிச் செலுத்தப்போவதில்லை என இலங்கை கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தது.

இந்த நிலையில், நாளை முதல் வருகிற 22-ந் தேதி வரை கொழும்பு பங்குசந்தையில் வர்த்தகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார ஸ்திரதன்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments