கொடநாடு வழக்கில் ஆறுகுட்டியின் மகனிடம் காவல் தனிப்படை விசாரணை

0 2691
கொடநாடு வழக்கில் ஆறுகுட்டியின் மகனிடம் காவல் தனிப்படை விசாரணை

கொடநாடு வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன் ஆகியோரிடம் கோவையில் காவல் தனிப்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயான், ஜம்சீர் அலி உள்ளிட்டோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் வெள்ளியன்று 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் ஆறுகுட்டியின் மகன், தம்பி மகன், உதவியாளர் நாராயணன் ஆகியோரிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments