பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொலை

0 3963
பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொலை

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யபட்ட நிலையில், அது தொடர்பான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பாலக்காடு மேலமுரி பகுதியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகியான ஸ்ரீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பிற்பகலில், 3 பைக்குகளில் வந்த 6 பேர் ஸ்ரீனிவாசனின் நிறுவனத்திற்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதித்தப்பட்ட அவர் உயிரிழந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நேற்று அம்மாநிலத்தில் எஸ்.டி.பி.ஐ., பிரமுகரான சுபைர் என்பவர் கொல்லப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஸ்ரீனிவாசன் கொலை நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments