சத்தீஸ்கர், மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி
சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர்.
அதேபோல், மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளமும் வென்றுள்ளது. நான்கு மாநிலங்களில் உள்ள ஒரு மக்களவை மற்றும் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மேற்குவங்கத்தின் அசான்சோல் எம்.பி தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
Comments