10 ஆண்டுகளாக பெற்ற தாயை வீட்டுச் சிறையில் அடைத்த மகன்கள்.. மூதாட்டியை முறையாக பராமரிக்காத மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

0 2676
10 ஆண்டுகளாக பெற்ற தாயை வீட்டுச் சிறையில் அடைத்த மகன்கள்.. மூதாட்டியை முறையாக பராமரிக்காத மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

தஞ்சையில் 10 ஆண்டுகளாக உணவு, உடை கொடுக்காமல் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூதாட்டி மீட்கப்பட்ட நிலையில், மூதாட்டியின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஞானஜோதி என்ற 70 வயதான அந்த மூதாட்டி பூட்டிய வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் நேரில் சென்று பார்க்கையில், மூதாட்டி உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்ததோடு பசியால் கீழே கிடந்த மண்ணை எடுத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் மூதாட்டியின் மூத்த மகன் சண்முகசுந்தரம் மீதும், மத்திய அரசு தொலைக்காட்சியில் டெக்னீசியனாக பணியாற்றும் இளைய மகன் வெங்கடேசன் மீதும், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments