ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் சோதனை ஓட்டம்.. குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் துவக்கி வைத்தார்

0 2457
ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் சோதனை ஓட்டம்.. குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் துவக்கி வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சுமார் 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 178 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் ரோப் கார் அமைப்பதற்கு கடந்த 2011-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த கட்டுமானப்பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் இன்று அதன் சோதனை ஓட்டத்தை குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் துவக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments