அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்

0 2103
அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் மாளிகையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும் பதவி விலக வலியுறுத்தி காலி முகத் திடலில் ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அங்கு போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஏப்ரல் 18ஆம் தேதிக்கு பின்னர் அவர்களை வெளியேற்ற அரசு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை அங்கு பாதுகாப்பு பணிக்காக கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments