காதல் வலையில் வீழ்ந்த +2 மாணவி..! பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறிப்பு.. ட்ரம்ஸ் இசைக் கலைஞருக்கு சிறை..!

0 4346
காதல் வலையில் வீழ்ந்த +2 மாணவி..! பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறிப்பு.. ட்ரம்ஸ் இசைக் கலைஞருக்கு சிறை..!

சென்னையில், பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தனிமையில் இருந்த வீடியோக்களை காட்டி மிரட்டி, 7 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்த ட்ரம்ஸ் இசைக் கலைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்..

பிளஸ் 2 மாணவியான தங்களது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பல லட்சம் ரூபாய் கேட்டு இளைஞர் ஒருவர் மிரட்டுவதாக மாணவியின் பெற்றோர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் கோடம்பாக்கத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவனை பிடித்து விசாரித்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.

இசைக் கச்சேரிகளில் டிரம்ஸ் வாசித்து வரும் ஞான பிரகாசம், மாணவி 8ஆம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு அறிமுகமானதாகவும், நாளடைவில் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தைக் கூறி பலமுறை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தேவைப்படும் போதெல்லாம் மாணவியிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதோடு, ஒரு கட்டத்தில் லட்சக் கணக்கில் பணம் தேவைப்பட்டதால், தனிமையில் இருந்த வீடியோக்களை மாணவியிடம் காட்டி மிரட்டி பணம் வாங்கி, ஞானப்பிரகாசம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணயில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறை மிரட்டும் போதும் மாணவி பயந்துபோய் பெற்றோருக்கு தெரியாமல் பணம் எடுத்து வந்து கொடுத்த நிலையில், அதிக தொகை காணாமல் போனதால் இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து ஞானப்பிரகாசத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments