சாலையில் சென்றுக் கொண்டிருந்த போதே திடீரென தீப்பற்றி எரிந்த அம்பாசிடர் கார்

0 3245
சாலையில் சென்றுக் கொண்டிருந்த போதே திடீரென தீப்பற்றி எரிந்த அம்பாசிடர் கார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், பழுது நீக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட அம்பாசிடர் கார், சாலையில் சென்றுக் கொண்டிருந்த போதே திடீரென தீப்பற்றி எரிந்தது.

செந்தில் என்பவர் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் இருந்து காரை விழுப்புரம் நோக்கி ஓட்டிச் சென்றார். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் வந்த போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்டு ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்திலேயே கார் தீப்பற்றி, கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள்ளாக கார் முழுவதும் எரிந்து நாசமானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments